பனித்துளி சங்கரின் "எல் நினோ" பதிவின் தொடர்ச்சியாக எழுதபடுவது...
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானது பஞ்ச பூதங்கள்: நீர்,நிலம்,நெருப்பு,ஆகாயம்,காற்று (சரியாதானே சொல்லி இருக்கேன்!!??). ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கும்,ஒன்று மிகையானால் அழிவிலும் முடியும். மனிதனுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கை வரங்கள் இவை. மனிதனின் வாழ்வு செழிக்க இவ்வைந்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அனால் நம் மக்களோ அவர்களின் தினசரி தேவையை மட்டுமே மனதில்கொண்டு இயற்கையை அழிக்கிறார்கள்.மக்கள்தொகை பெருக்கத்தால் மட்டுமே காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் ஆவதில்லை.இது இன்று நேற்று ஆரம்பித்ததும் அல்ல. காடுகளை அழிப்பது என்ற சுபநிகழ்ச்சி நம் முன்னோடிகளான ஆங்கிலேயர்களால் 19 ம் நூற்றாண்டின் ஒரு சுபயோக சுபதினத்தில் துவங்கி வைக்க பட்டது.
தாமஸ் முன்ரோ என்பவர் 1823 ம் ஆண்டு நம் நாட்டில் காடுகளின் அழிவிற்கு வழிவகுத்த புண்ணியவான். அவர் ஆட்சி காலத்தில் மரங்களை வியாபார நோக்கத்துடன் வேட்டி வீழ்த்த ஆரம்பித்தனர். பின் வந்த லார்ட் டல்ஹௌசி என்பவர் இந்த தவறை மாற்ற நினைத்தாலும் இன்றைய நூற்றாண்டு வரை நீடித்துதான் வருகிறது. மேலும் அவர்கள் தந்த பாலங்களும், சாலை வசதிகளும், வாகன வசதிகளும் இதற்கு துணையாக நின்றன.
சுதந்திரத்திற்கு பிறகாவது நம் தலைவர்கள் இந்நிலையை மாற்றினார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டின் தொழில் வளர்ச்சி ஒரு நிலையை எட்டியது.அது மேலும் வளரவும், புதிய தொழில்கள் உருவாகவும் இட வசதியும், கட்டுமான வசதியும் தேவை பட்டது. இவற்றிற்கு மரங்களும், மரங்கள் நிறைந்த காடுகளுமே உரமாகின, உணவாகின. காடுகளின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களும் சம்பிரதாயங்களாகவே உள்ளன.
கிராமங்களில் மக்கள் நேருப்பிக்காக மரங்களை வேட்டி விரகுகளாக்குவதும், வீடு கட்டுவதற்கும், பல விலையுயர்ந்த மரங்கள் தொழில் லாபத்திக்காகவும், மக்களின் தங்கு வசதிக்காகவும் என பல காரணங்களில் காடுகள் அழிக்க படுகின்றன. அவற்றின் அழிவால் மக்கள் மழையை மட்டும் இழப்பதில்லை, பல காடுகளில் வாழும் பழங்குடியினர் தன் தாய் நாட்டிலேயே அகதிகளாக்க படுகின்றனர். இது பலருக்கு தெரிவதுமில்லை, தெரிந்த பலர் உணர்வதுமில்லை.
நகரங்களின் மேம்பாட்டிற்காக வேட்டுமரங்கள், எரிபொருளுக்கு பயன்படும் மரங்களின் தேவைகள் அதிகரித்தன. இத்தேவையை நிறைவேற்ற 1950-51 இல் 7180 ஆயிரம் கோடி சதுர பரப்பளவில் இருந்த காட்டிலாகாவின் நிலம் 1979-80 இல் 7460 ஆயிரம் கோடி சதுர பரப்பளவாக அதிகரித்தது. காட்டிலாக்கா 1970-71 இல் 43 ஆயிரம் கோடி நிலபரப்பை இழந்தாலும் 1950-51 ஐ விட 5 மடங்கு லாபத்தை ஈட்டியது. 60 களில் மரங்களை வேட்டி வியாபாரமாக்குவது ஒரு சிகரத்தையே தொட்டது. இரண்டாம் உலக போருக்கு பின் சில இயற்கை காரணங்களால் தேவையின் அதிகரிப்பிற்கு ஏற்ப மரங்களின் வளர்ச்சி இல்லையென அரசாங்கம் கண்டறிந்தது. இதனால் மேன்மேலும் மரங்களை வெட்டுவதற்கு 1988 இல் ஒரு தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆயினும், சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி வடஇந்தியாவில் 2969 சதுர கிலோமீட்டரும், அசாமில் 2788 சதுர கிலோமீட்டரும் ஆந்திராவில் 1788 சதுர கிலோமீட்டருமாக காடுகளின் அழிவு குறிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி காடுகளின் பாதுக்கப்பிற்காக கொடுக்கும் பணமும் சொற்பமாகவே அதற்கு உபயோகபடுத்த படுகிறது.காடுகளின் பாதுகாப்பிக்காக இருக்கும் அதிகாரிகளும் லஞ்சத்திற்காக செய்யும் தவறுகள் அதிகரித்தே வருகின்றன. காட்டுக்குள் நடக்கும் பல திருட்டுகளும், அது மீறல்களும் இதனால் வெளிச்சத்திற்கே வருவதில்லை.
ஒரு பக்கம் விழிப்புணர்ச்சி முகாம்கள் அமைக்கபட்டாலும் மறுபக்கம் காடுகளின் அழிவு தடுக்கமுடியாத ஒன்றாகி விட்டது என்றே கூற வேண்டும்.
ஊர்ல நல்லவங்க நல்லு பேர் இருந்தாதான் மழை பெய்யும்னு சொல்லுவாங்க.அதுக்கு பொருள் நல்லவங்களா இருந்தாதான் இருக்குற மரங்களை வெட்டாம அவங்களால முடிஞ்சா அளவுக்கு புதுசா மரங்களையும் வளப்பாங்க. அதுனால ஊர்ல மழையும் பெய்யும் அப்படீங்கறதுதான்
( என்னென்னமோ தோணுது போங்க!!!).
"மரங்களின்றி மழை இல்லை.
மழையின்றி மனிதனில்லை
மனிதனின் சுவாசமில்லை...." (கவித...கவித...)
எவ்வளவுதான் தேவைகள் கூடினாலும் இயற்கையை அழிப்பதென்பது "நம் விரல்களால் நாமே நம் கண்களை காயபடுத்துவது" போலாகும். இதனை உணர்ந்து "உபயோகம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நன்று"(ஆங்!!பழமொழியெல்லாம் வருது ) என்பது போல வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்காவிட்டாலும் காட்டில் இருக்கும் மரங்களையாவது அழிக்காமல் இருந்தாலே நல்லது செய்வது போலாகும்.
எதோ என்னால முடிஞ்சத படிச்சி புடிச்சி எழுதிட்டேன். இத்தொடர் பதிவு எழுத்தோட நிக்காமலும்,படிக்கிறவங்களுக்கு படிப்போட நிக்காமலும் ஏதாவது நல்லது நடந்தா சந்தோஷம்தாங்க.
தங்க தட்டென தகிக்கும் சூரியனை தனக்குள் அடக்கிவிடும்...
பல கவிஞர்களின் சிந்தனை சுரங்கம்
காதலர்களின் துணைவன்
குழந்தைகளின் பிரம்மாண்டம்
மீனவர்களின் மாதா, பிதா, குரு, தெய்வம்
வீடற்றவர்களின் குளியலறை
ஏழை மக்களின் வியாபார ஸ்தலம்
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி சுரங்கம்
வியாபாரிகளின் பரிவர்த்தனை சாலை
நாடுகளுக்கோ எல்லைகோடு
கோடானுகோடி உயிர்களின் வாழ்விடம்
சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்பம்
சிலருக்கு வாழ்க்கையின் முடிவு...
இன்னும் எத்தனையோ பெருமைகளுடன்
அமைதியாய் ....
கடல்.!!!
பள்ளி பருவத்திலே
பசுந்தென்றல் காதலடி...
சேர்ந்து படிப்பவர்,
தூர நடிப்பவர் அழகாய் இருந்தால்
மனதில் சாரலொன்று அடிக்குதடி...
மூத்த இளம் வயதினிலே
தெளிவுற்ற நெஞ்சமது
தேனடையாய் தேங்குதடி
ஆசைதனை சேர்க்குதடி...
இத்தனை நாளும் கண்ட காதல்
மனதுக்குள்ளே கொண்ட காதல்
கானல் நீராய் மறையுதடி...
விடிந்தெழுந்து பார்க்கயிலே
குழந்தை அருகில்
உறங்குதடி
துணையோ தேநீர்
கொடுக்கிறாளடி....
அந்த கானல் நீரின்
காதலையும்
இத்தேநீர் காதல்
வெல்லுதடி
வெல்லமாய்
மனதினில் இனிக்குதடி...
முன்குறிப்பு:
இங்கு (US) வந்த ஒரு மாதமாய் எங்களுக்கு அனைத்து வகையிலும் பேருதவியாய் இருக்கும் திரு. பிரகாஷ் (என் கணவரின் நண்பர்) அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"பையா" ஒரு அனுபவம்:
எனக்கு ஒரு படமாவது முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக உண்டு. பல சூழ்நிலைத் தடைகளினால் அது நிராசையாகவே இருந்து வந்தது. பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி இது மட்டும் நிறைவேறவே இல்லை.
அனால் சென்ற வாரம் வெள்ளிகிழமையில் அது நிறைவேறியது. அதுவும் இரவு காட்சி. கேட்கவா வேண்டும்??மனம் குழந்தையாய் மாறி குதூகலித்தது. 40 நிமிட பயணம். அழகாய் தானிருந்தது.
"பையா" முன் பாதி இளமையின் துள்ளலும், பின் பாதி காதலின் வேகமும் நிறைந்திருந்தது. பழமை கதையை, புதிய காட்சி திறனோடு அருமையாக கொடுத்திருகின்றார்கள். இயற்கை ரசிகர்களுக்கு இப்படத்தில் வரும் பல இடங்கள் கண்களுக்கு விருந்து. யுவனின் இசை மழையில் அனைத்துப் பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டும்.
படம் மிக வேகமாக முடிந்தது. மீண்டும் வீட்டிற்கு வருகையில் அந்த கார் பயணம் நமக்கு படத்தை நினைவுப் படுத்தியது.
நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது, பார்க்கத்தகுந்த படமும் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.
என்ன நண்பர்களே நான் சொல்வது?
இதுதாங்க என்னோட capsicum egg pepper...
நல்லா எண்ணெயிலேயே வதக்குநீங்கன்னா சுப்பர் டேஸ்டுங்க.........ட்ரை பண்ணி பாருங்க மக்களே............
அப்பப்பா..............ஒரு பதிவ கொடுகறதுக்குள்ள நம்ம பெண்டு நிமிந்துடுச்சு.......பல தலைங்க அசராம பதிஞ்சிக்கிடே இருகைங்கப்பா.......உஸ்ஸ்ஸ்.........சரி நம்ம மட்டேருக்கு வருவோம்...
நானும் எங்க வீட்டுக்காரரும் மெட்ராஸ்லதாம்ப்பா இருந்தோம்.அவரும் சளைக்காம IT கம்பெனில வேலப்பாக்க போயிட்டு இருந்தாரு....இந்த onsitu onsitu ன்னு ஒன்னு சொல்லுவாங்களே அது இவரு கேட்டப்பல்லாம் வரல....எனக்கு வேலை கெடச்சு நாங்க onsitu வேண்டாம்னு நேனச்சப்பதான் வந்துச்சு....
ஒரு வழியா அமெரிக்கால அட்லாண்டான்னு ஒரு எடத்துக்கு வந்து சேந்தோம்.ஒரு மாசமாச்சு....என்னா குளுரு...ஒருத்தங்களையும் வெளிய பார்க்கமுடியனுமே ...பொழுது போவாமதேன் இங்க (blog)வந்தேன்...
என்னங்க பண்றது...பொழுது போவமடேங்குது......சுத்தி பார்க்க போவலாம்னா இந்த ஊருல கவர்மெண்டு பஸ் கேடயாதாம்....நம்ம மெட்ராஸ்ல கவர்மெண்டு பஸ்ஸு இல்லன்னா பொழப்பே கெடயாது...இங்க எல்லாம் காருலதான் போறாய்ங்க....என்னத்த சொல்லறது.....ஊரும் சுத்த முடியாம பக்கத்துக்கு வீட்டுலயும் கதப்பேச முடியாம...முடியலங்க முடியல......எவ்வளவு நாள்தான் போர் அடிக்கத மாறியே நடிக்கிறது?......
அதாங்க சொல்லிபுட்டேன்.....யாராவது அமெரிக்கா வந்தா அதுவும் அட்லாண்டாங்கற இந்த ஊருக்கு வந்தா கார் வாங்க தனியா காசு எடுத்துக்கிட்டு வந்துபுடுங்க.....இல்ல வாழ்க்கையே வீட்டுக்குள்ள முடங்கிடும்.....
தயவு பண்ணி யாரவுது என்னையும் உங்க கொட்டத்துல சேர்த்துக்கோங்க...எனக்கும் பொழுது போவும்....இப்படி எழுதவும் போலம்பவும் ஆள் வேண்டாமா?
சரி....இதோட இந்த பதிப்ப முடிச்சுக்கிறேன்...இனியாவது கொஞ்சம் சந்தோஷமா எழுதற சந்தர்ப்பம் வர்றதான்னு பாப்போம்.....
எல்லா தலைங்கக்கிடேயும், என்ன போல புது வரவுங்களுக்கிடேயும் இருந்து உத்தரவு வாங்கிக்கிரேனுங்க................
டாட்டா....பை....பை...ங்கோ!!!!!!!!!!!!!
தினமொரு(ரே) பொழுது………………
உன் முகம் பார்த்து
என் விடியல்
நீ அலுவலகம் செல்கையில்
என் அந்திமம்
கோடையின் சாரலைப்போல்
நீ வரும் உணவு வேளை
கதிரவன் சாய்கையில்
உன் வருகை
குழந்தையின் உற்சாகமாய்
உன்னுடன் நடைப்பயிற்சி
உன் அலுவலில் என் கவனம்
என் தனிமையில் உன் மனம்
என்றும்போல் உன் புகழோடு
நம் இரவு உணவு
நீ உறங்கையில்
எனக்கு ஆரம்பம்
ஆகிறது,
அடுத்த நாளுக்கான
தனிமை ஒத்திகை.........