தலைகனம் இல்லாதவர்

தங்க தட்டென தகிக்கும் சூரியனை தனக்குள் அடக்கிவிடும்...



பல கவிஞர்களின் சிந்தனை சுரங்கம்
காதலர்களின் துணைவன்
குழந்தைகளின் பிரம்மாண்டம்

மீனவர்களின் மாதா, பிதா, குரு, தெய்வம்
வீடற்றவர்களின் குளியலறை
ஏழை மக்களின் வியாபார ஸ்தலம்

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி சுரங்கம்
வியாபாரிகளின் பரிவர்த்தனை சாலை
நாடுகளுக்கோ எல்லைகோடு

கோடானுகோடி உயிர்களின் வாழ்விடம்
சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்பம்
சிலருக்கு வாழ்க்கையின் முடிவு...

இன்னும் எத்தனையோ பெருமைகளுடன்
அமைதியாய் ....
கடல்.!!!

காதல்கள்...

பள்ளி பருவத்திலே 
பசுந்தென்றல் காதலடி...
சேர்ந்து படிப்பவர், 
தூர நடிப்பவர் அழகாய் இருந்தால்
மனதில் சாரலொன்று  அடிக்குதடி...


School children





கல்லூரி நாட்களிலே
இளம் பருவத்தின் 
உச்சத்திலே
சிரிப்பவரும்,சிறந்து 
விளங்குபவரும்
காதலராய் உருவங்
கொண்டு மயங்கவும்
வைத்தார்களடி...

love pair



மூத்த இளம் வயதினிலே
தெளிவுற்ற நெஞ்சமது
தேனடையாய் தேங்குதடி
ஆசைதனை சேர்க்குதடி...





கனவில் கூட தந்தை வந்து
மிரட்டுவதே தெரியுதடி
கனவு காதலில் 
மின்சார வெட்டு நிகழுதடி...


இத்தனை நாளும் கண்ட காதல்
மனதுக்குள்ளே கொண்ட காதல்
கானல் நீராய் மறையுதடி...


Free Desert Sun Screensaver 1.0

விடிந்தெழுந்து பார்க்கயிலே
குழந்தை அருகில் 
உறங்குதடி
துணையோ தேநீர் 
கொடுக்கிறாளடி....


touched father looking on his sleeping son


அந்த கானல் நீரின் 
காதலையும் 
இத்தேநீர் காதல்
வெல்லுதடி
வெல்லமாய் 
மனதினில் இனிக்குதடி...


1600*1200  Children's illustration of Mother Day and Family Love - 1680*1050 Happy family love -  Lovely Art illustration for Mother's day15

கொத்து சப்பாத்தி

தேவையானவை:

சப்பாத்தி - 8
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பெரியது,பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
காரட் - 1 (துருவியது)
ப.மிளகாய் - 2
முட்டை - 2
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்துமல்லி தழை - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. சப்பாத்தியை தோசைக்கல்லில் இட்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்து தாளிக்கவும்.
3. பின் கருவேப்பிலை, ப.மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
4. இத்துடன் கொத்துமல்லி, தக்காளி மற்றும் காரட் மூன்றையும் சேர்த்து வதக்கவும்.இவை வதங்கியவுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி சப்பாத்தியை கலந்து கிளறி விடவும்.
5. சப்பாத்தி நன்றாக வதங்கிய பதத்திற்கு வந்தவுடன் இரண்டு முட்டைகளையும் உடைத்து அதில் ஊற்றி கிளறவும்.
6. சப்பாத்தி கட்டி பிடிக்காமல் உதிரியாக இருக்கும்படி கிளறிவிடவும். முட்டை சப்பாத்தியுடன் கலந்து பொரிந்த பதத்திற்கு வந்ததும் கொத்து சப்பாத்தி தயார்.

பி.கு 1 : சிக்கன் குருமா இருந்தால் ஒரு குழம்பு கரண்டி அளவிற்கு ஊற்றி கிளறி விட்டால் சுவை நன்றாக இருக்கும்.
பி.கு 2 : சைவப்பிரியர்கள் முட்டைக்கு பதில் பீன்ஸ் முட்டை கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி காரட்டுடன் சேர்த்து வதக்கிவிட்டு பின் கூறியவற்றை போல சேய்துக்கொள்ளலாம்.
பி.கு 3 : மசாலா வாசம் வேண்டுமென்றால் இரண்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளவும்.
பி.கு 4 : சப்பாத்திக்கு பதிலாக பரோட்டாவை சேர்த்து கொண்டால் கொத்து பரோட்டா தயார்.


பின் குறிப்பே ஒரு செய்முறை அளவுக்கு இருக்குன்னு நீங்க ஏசுறது எனக்கு கேக்குது.இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் தரலாமேன்னுதான்....கோவிச்சுக்காதீங்க... :) :)

சொர்க்கமும்,நரகமும்...

வான்மகளின் நீல அழகில்
கதிரவன் ஓங்கி நின்று நிலமகளின்
அழகினை ரசிப்பதுவும்...

காலைப்பனியும்
அதில் நனைந்த மண் சாலையும் ,மலர்களும்
தென்னஞ்சோலையும்
அதின் சில்லென்ற காற்றும்

குருவிகளின் கூடும்
அதை போன்ற
குடிசை வீடுகளும்
சாணத்தின் வாசனையில்
மின்னிடும் வண்ணக்கோலங்களும்

கூடிவிளையாடும் குழந்தைகளும்
ஆடிப்பாடும் பருவப்பேண்டிரும்

கிராமத்தின் அழகே
கண்கொள்ளாக் காட்சியன்றோ
மனம்
கொள்ளை போகும் வாழ்க்கையன்றோ...


இரவும் பகலும் தெரியா
நகரத்தில்
நேரம் குறித்து விடியல் கண்டு
மாசு நிறைத்த வாகனப் புகையில்
நாற்றம் சகித்து
அலுவல் செல்லும்
மனிதர்களும்,
கூடிவிளையாட நேரமின்றி
புத்தக போதியினிலே புதையும்
குழந்தைகளும்,
அந்தோ கொடுமையன்றோ...

மக்கள் தொகையின்
அடர்த்தியினால்
வீதிகள் என்ற சந்துகளில் மக்கள்
நெரிந்து வாழும் வாழ்க்கையும்
மனத்தைக் கொள்ளும் காட்சியன்றோ...

கிராமத்து தேவதையின்
வரமற்ற எந்நகரமும்
நரகம்தானே...

"பையா" ஒரு அனுபவம்

முன்குறிப்பு:
இங்கு (US) வந்த ஒரு மாதமாய் எங்களுக்கு அனைத்து வகையிலும் பேருதவியாய் இருக்கும் திரு. பிரகாஷ் (என் கணவரின் நண்பர்) அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"பையா" ஒரு அனுபவம்:

எனக்கு ஒரு படமாவது முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக உண்டு. பல சூழ்நிலைத் தடைகளினால் அது நிராசையாகவே இருந்து வந்தது. பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி இது மட்டும் நிறைவேறவே இல்லை.

அனால் சென்ற வாரம் வெள்ளிகிழமையில் அது நிறைவேறியது. அதுவும் இரவு காட்சி. கேட்கவா வேண்டும்??மனம் குழந்தையாய் மாறி குதூகலித்தது. 40 நிமிட பயணம். அழகாய் தானிருந்தது.

"பையா" முன் பாதி இளமையின் துள்ளலும், பின் பாதி காதலின் வேகமும் நிறைந்திருந்தது. பழமை கதையை, புதிய காட்சி திறனோடு அருமையாக கொடுத்திருகின்றார்கள். இயற்கை ரசிகர்களுக்கு இப்படத்தில் வரும் பல இடங்கள் கண்களுக்கு விருந்து. யுவனின் இசை மழையில் அனைத்துப் பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டும்.
படம் மிக வேகமாக முடிந்தது. மீண்டும் வீட்டிற்கு வருகையில் அந்த கார் பயணம் நமக்கு படத்தை நினைவுப் படுத்தியது.

நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது, பார்க்கத்தகுந்த படமும் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.

என்ன நண்பர்களே நான் சொல்வது?

இதுதாங்க என்னோட capsicum egg pepper...





நல்லா எண்ணெயிலேயே வதக்குநீங்கன்னா சுப்பர் டேஸ்டுங்க.........ட்ரை பண்ணி பாருங்க மக்களே............

அமெரிக்காவுக்கு நானும்தானே போனேன் ...

அப்பப்பா..............ஒரு பதிவ கொடுகறதுக்குள்ள நம்ம பெண்டு நிமிந்துடுச்சு.......பல தலைங்க அசராம பதிஞ்சிக்கிடே இருகைங்கப்பா.......உஸ்ஸ்ஸ்.........சரி நம்ம மட்டேருக்கு வருவோம்...

நானும் எங்க வீட்டுக்காரரும் மெட்ராஸ்லதாம்ப்பா இருந்தோம்.அவரும் சளைக்காம IT கம்பெனில வேலப்பாக்க போயிட்டு இருந்தாரு....இந்த onsitu onsitu ன்னு ஒன்னு சொல்லுவாங்களே அது இவரு கேட்டப்பல்லாம் வரல....எனக்கு வேலை கெடச்சு நாங்க onsitu வேண்டாம்னு நேனச்சப்பதான் வந்துச்சு....

ஒரு வழியா அமெரிக்கால அட்லாண்டான்னு ஒரு எடத்துக்கு வந்து சேந்தோம்.ஒரு மாசமாச்சு....என்னா குளுரு...ஒருத்தங்களையும் வெளிய பார்க்கமுடியனுமே ...பொழுது போவாமதேன் இங்க (blog)வந்தேன்...

என்னங்க பண்றது...பொழுது போவமடேங்குது......சுத்தி பார்க்க போவலாம்னா இந்த ஊருல கவர்மெண்டு பஸ் கேடயாதாம்....நம்ம மெட்ராஸ்ல கவர்மெண்டு பஸ்ஸு இல்லன்னா பொழப்பே கெடயாது...இங்க எல்லாம் காருலதான் போறாய்ங்க....என்னத்த சொல்லறது.....ஊரும் சுத்த முடியாம பக்கத்துக்கு வீட்டுலயும் கதப்பேச முடியாம...முடியலங்க முடியல......எவ்வளவு நாள்தான் போர் அடிக்கத மாறியே நடிக்கிறது?......

அதாங்க சொல்லிபுட்டேன்.....யாராவது அமெரிக்கா வந்தா அதுவும் அட்லாண்டாங்கற இந்த ஊருக்கு வந்தா கார் வாங்க தனியா காசு எடுத்துக்கிட்டு வந்துபுடுங்க.....இல்ல வாழ்க்கையே வீட்டுக்குள்ள முடங்கிடும்.....

தயவு பண்ணி யாரவுது என்னையும் உங்க கொட்டத்துல சேர்த்துக்கோங்க...எனக்கும் பொழுது போவும்....இப்படி எழுதவும் போலம்பவும் ஆள் வேண்டாமா?
சரி....இதோட இந்த பதிப்ப முடிச்சுக்கிறேன்...இனியாவது கொஞ்சம் சந்தோஷமா எழுதற சந்தர்ப்பம் வர்றதான்னு பாப்போம்.....

எல்லா தலைங்கக்கிடேயும், என்ன போல புது வரவுங்களுக்கிடேயும் இருந்து உத்தரவு வாங்கிக்கிரேனுங்க................

டாட்டா....பை....பை...ங்கோ!!!!!!!!!!!!!

என் முதல் பதிவு

தினமொரு(ரே) பொழுது………………

உன் முகம் பார்த்து

என் விடியல்

நீ அலுவலகம் செல்கையில்

என் அந்திமம்

கோடையின் சாரலைப்போல்

நீ வரும் உணவு வேளை

கதிரவன் சாய்கையில்

உன் வருகை

குழந்தையின் உற்சாகமாய்

உன்னுடன் நடைப்பயிற்சி

உன் அலுவலில் என் கவனம்

என் தனிமையில் உன் மனம்

என்றும்போல் உன் புகழோடு

நம் இரவு உணவு

நீ உறங்கையில்

எனக்கு ஆரம்பம்

ஆகிறது,

அடுத்த நாளுக்கான

தனிமை ஒத்திகை.........