பள்ளி பருவத்திலே
பசுந்தென்றல் காதலடி...
சேர்ந்து படிப்பவர்,
தூர நடிப்பவர் அழகாய் இருந்தால்
மனதில் சாரலொன்று அடிக்குதடி...
கல்லூரி நாட்களிலேஇளம் பருவத்தின் உச்சத்திலேசிரிப்பவரும்,சிறந்து விளங்குபவரும்காதலராய் உருவங்கொண்டு மயங்கவும்வைத்தார்களடி...
மூத்த இளம் வயதினிலே
தெளிவுற்ற நெஞ்சமது
தேனடையாய் தேங்குதடி
ஆசைதனை சேர்க்குதடி...
கனவில் கூட தந்தை வந்து
மிரட்டுவதே தெரியுதடி
கனவு காதலில்
மின்சார வெட்டு நிகழுதடி...
இத்தனை நாளும் கண்ட காதல்
மனதுக்குள்ளே கொண்ட காதல்
கானல் நீராய் மறையுதடி...
விடிந்தெழுந்து பார்க்கயிலே
குழந்தை அருகில்
உறங்குதடி
துணையோ தேநீர்
கொடுக்கிறாளடி....
அந்த கானல் நீரின்
காதலையும்
இத்தேநீர் காதல்
வெல்லுதடி
வெல்லமாய்
மனதினில் இனிக்குதடி...
27 April 2010 at 1:16 pm
//அந்த கானல் நீரின்
காதலையும்
இத்தேநீர் காதல்
வெல்லுதடி
வெல்லமாய்
மனதினில் இனிக்குதடி...//
:)
பதிவுகள் மெருகேறிக்கொண்டே வருகின்றது.
27 April 2010 at 2:23 pm
உங்கள் ஊக்கம் + ஆதரவின் வெளிப்பாடு ஜீவன்பென்னி
2 May 2010 at 6:32 am
டச் பண்ணிடிங்களே உடுக்கை ...
5 May 2010 at 4:28 pm
//டச் பண்ணிடிங்களே உடுக்கை ...(நான் தமிழன்)//
ஐயோ!!! நான் பாட்டுக்கு செவனேன்னு இருக்கேன்...நீங்க வேற... :-)
நன்றிங்க கருத்துக்கு...